திருந்துவோமா நாம் ? - மீண்டும் கி அ அ அனானி
நேற்றே கி அ அ அனானியிடம் இருந்து கீழ்கண்ட மேட்டர் மெயிலில் வந்திருந்தது.நேற்று முழுவதும் மெயில் பார்க்காததால் , இதையும் பார்க்கவில்லை. ஆனால் " இது பற்றி மேலும் எனது கருத்தை உங்கள் பதிவில் வெளியிட விருப்பம் இல்லை போல் தெரிகிறது,பரவாயில்லை அதனால் இதை முகமூடி பதிவிலும் பின்னூட்டமாக போட்டு விட்டேன்" என கடுப்பாகி இன்று மெயில் போட்டிருந்தார். :-)
ஏற்கனவே கி அ அ அனானியின் கொ ப செ ஆக ஆக்கப்பட்டு விட்ட படியாலும், கருத்து சுதந்திரத்தின் மேல் உள்ள தீவிர நம்பிக்கையாலும் கி அ அ அனானி அனுப்பிய மேட்டர் பதிவாக கீழே..:))) என்சாய்..:)))
எ.அ.பாலா
*****************************************************************************
தொடரும் தோழரின் "கவனிப்பு"
தோழர் "வளர்மதி" என்பவர் அருமையாக சில பதிவுகள் போட்டிருக்கிறார்... அதன் சாராம்சம் கீழே...
"போலி செய்தல் அப்படீங்குற பேருல..கருத்துக்களை, முழு புரிதலும் இல்லாமல் காப்பியடித்து தனது போல் கையாளுவதை கண்டித்து எழுதியிருப்பார் போல் இருக்கிறது...அது சுகுணா திவாகர் என்ற பதிவரை சுட்டிச் சொல்வது போல் பட்டிருக்கிறது போல " சரி...இதுல ஒனக்கென்ன அங்கலாய்ப்பு என்கிறீர்களா...இல்லீங்க..யாரு போலி பண்ணினா நமக்கென்ன யாரு சுட்டிக்காட்டினா நமக்கென்ன ?ஏதோ நாமளுண்டு நம்ம பொழப்புண்டுன்னு சும்மாதாங்க இருந்தோம்.
" மேலும் வளர்மதி , சுகுனா திவாகர் மற்றும் வரவணை ரெண்டு பேரையும் படிங்கப்பா ..படிக்காம மேம் போக்கா பேசாதீங்க " என்று ஸ்கூல் மாஸ்டர் ரேஞ்சுக்கு அதட்டியிருப்பார் போல... இதுல உனக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா...எனக்கென்னாங்க பிரச்சினை இருக்கப் போகுது..சொம்மாதானுங்க கெடந்தோம்.
" இதுக்கு வரவணை தாஸ் காப்பிடலை காரல் மார்க்ஸ் தவிர யாரும் படிக்கவில்லை... எங்கல்ஸே ப்ரூப் ரீடிங் போதுதான் படிச்சாரு" எங்கிற ரேஞ்சுக்கு பதிவு போட்டு சின்னப்பையன் கக்கூஸ் போய்க்கினே பேப்பர் படிக்கிற படமெல்லாம் போட்டு அல்லாரும் நல்லா வாசிங்க... வாசிங்க அப்படீன்னு பதிவு போட்டாருங்க....இதுல உனக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா... எனக்கென்னாங்க பிரச்சினை இருக்கப் போகுது..அல்லாரும் அல்லா எடத்திலேயும் வாசிக்கிறது நல்லதுதானுங்களே.
" இதுல கடுப்பாயி வளர்மதி சொன்னாரு...சரி-தப்புன்னெல்லாம் பார்க்காம ஒரு பிரச்சினை அப்ப்டீன்னு வரும் போது இவனுங்க ரண்டு பேரும் சாதிப் புத்தியை காட்டிட்டாங்க அப்படீன்னு ரண்டு பேர் சாதி பேரெல்லாம் போட்டு "ஜாதிப் புத்தி" அப்படீன்னு எபெக்டுக்கு வடமொழி"ஜ" எல்லாம் யூஸ் பண்ணி அப்புறம் ஊருகாயாக பாப்பாரப் புத்தி, பாப்பார வேலை என்ரெல்லாம் போட்டு ஒரு பதிவு போட்டாருங்க ..இதுல உனக்கு என்னா பிரச்சினைஅப்படீங்குறீங்களா..இல்லை சாமி இதுலையும் எனக்கு ஒரு பிரச்சினையில்லை...பொத்திக்கினு தான் இருந்தோம்...இதுல காமடி இன்னான்னா இந்தப் பதிவுல இவரு சுகுணா. வரவனையை விட பாப்பானுங்களைதான் ஜாஸ்தி திட்டியிருக்கார்..ஆனா அல்லாரும் மெளனம் காத்துக்கிட்டுதான் இருந்தாங்க..ஆரும் வம்பு வலிக்கலை...
இனிமே தான் மெயின் ஸ்டோரி
" சுகுணா திவாகர்..பிரேக்கிங் பாயிண்ட்டை அடைஞ்சுட்டார் போல( இதுவும் வலையுலகில ஒருத்தர் சொன்னதுதான்)..என்னை சாதியத்துடன் தொடர்பு படுத்தி எழுதிட்டாங்க...அதுனால நான் ஒரு வெறுமயை உணர்கிறேன் அப்படீன்னு சொல்லி...வலர்மதியை பர்சனலா நாலு திட்டு திட்டி இனிமே பதிவெழுதப் போறதில்லை அப்படீன்னு " வேதனயுடன் விலகுகிரேன் " அப்படீன்னு ஒரு செப்டம்பர் பிரகடனம் பண்னினாருங்க...சரி இதுல உனக்கென்ன பிரச்சினை அப்படீங்குறீங்களா... இருக்குங்களே..முன்னால நாம போட்ட ஒரு பதிவுல கருத்தை எதிர் கொள்வதுடன் சேர்த்து எபெக்டுக்காக பதிவை வெளியிட்டவரின் ஜாதியை போட்டு புரட்னாருங்கோ இதே சுகுணா திவாகர்...அதுக்கும் இதுக்கும் என்னாங்க வித்தியாசம்...இப்பம் உங்களை சாதி சொல்லி திட்டுனதுல இம்புட்டு பீலிங்ஸாகி விட்டீர்களே அப்படீன்னு நாம கேட்டமுங்க போன பதிவுல்..
இன்னும் முகமூடி மாதிரி சில பேர் வேற வேற மாதிரி பதிவு போட்டாருங்கோ அவங்கவங்க ரேஞ்சுல.
இனிமே தான் கிளைமாக்ஸு
வளர்மதி "பார்ப்பனக் கூத்து, எச்சரிக்கை " அப்படீன்னு ஒரு டகால்பாஜி காட்டியிருக்காருங்கோ...அவரு இவங்களுக்கு மண்டையில ஒரைக்கணுமுன்னு ஜாதி பேர் சொல்லி திட்டினாராம்..அதுவும் சாதிய மனோபாவம் என்று சொல்லும்போது, செறிவான புரிதல்களோடேயே சொல்கிறேன் " அப்படீன்னு தன்னிலை விளக்கம் வேற."... சவாசு அப்படிப் போடு சவாசு
" அப்புறம் இதை சற்று 'காட்டமாக' ( அதாவது அடுத்தவன் சாதியை பற்றி திட்டி "ஜாதிப் புத்தி" என அறிவார்த்தமா எழுதிக் கொண்டிருக்கும்போதே,) சில பார்ப்பன விஷமிகள், "ஊர் ரெண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்று, இடையில் புகுந்து விளையாடத் தொடங்கிவிட்டதைக் கவனிக்க நேர்ந்து, அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணம் கொண்டு. அதனாலேயே, இதை இத்தோடு முடித்துக் கொள்ள விழைகிறாறாம்." அதாவது ரண்டே ரண்டு பேரை மட்டும் ஜாதியச் சொல்லி திட்டுனதோடு நிப்பாட்டிக்கிறாராம் " ஹொய் ஹொய்யா .. ஹய்யா...ஹொய் ஹொய்யா..திராவிடமும் மார்க்ஸியமும் இவர் தயவால் தமிழ் வலையுலகில் புனர் ஜென்மம் எடுத்து விட்டது...சரி ..இதுல உனக்கென்ன பிரச்சினை அப்படீங்குறீங்களா..அட..எனக்கென்னங்க பிரச்சினை இருக்கப் போகுது..நல்லா நடக்கட்டும்.
இனிமேதான் சூப்பர் ஷாட்டு
""இதற்கு மேலும் விஷமங்கள் தொடர்ந்தால், மற்ற தோழர்கள் 'கவனித்துக்' கொள்வார்கள் என்று நம்புகிறேன்.""" அப்படீன்னு கட்சித்தலைவர் ரேஞ்சுக்கு போய் கோடி காட்டியிருக்கிறார் இந்த கேடி(கேடிக்கு அர்த்தம் இவர் பதிவிலேயே சொல்லியிருக்காருங்க)..இதுல உனக்கென்ன பிரச்சினை அப்படீங்குரீங்களா...என்னங்கண்ணா இப்படி கேட்டுட்டீங்க....அன்ணா....அண்ணா ...என்னைய காப்பாத்துங்கண்ணா ..பயம்மா இருக்குண்ணா...வளர்மதி "தோழர்கள்" மூலமா என் தமிழ் வலையுலகுக்கான இலக்கிய சேவையை முற்றுப் பெறாமலேயே முடிவுக்கு கொண்டு வந்து விடுவாரோன்னு அஞ்சி நடுங்குறேனுங்கண்ணா....காப்பாத்துங்கண்ணா....இப்போதைக்கு பயத்துல தலை மறைவா இருக்கேனுங்கண்ணா :))
இந்த மாதிரி அரைகூவலுக்கு ஒரு பதில் மரியாதை
விவாதம் பண்ண முடியலைனா, நண்பர்களாக கருதப் பட்டவர்களையே கீழ்த்தரமாக சாதியை சொல்லி திட்டுரதும்..அதுக்கு புத்தகத்தை பொரட்டி பொரட்டி படிச்சு செஞ்சது சரிதான் அப்படீன்னு சுத்திவளச்சு வியாக்கியானம் எழுதுர ஆளு நானில்லை...அதே மாதிரி தப்புன்னு தோணிச்சுன்னா தைரியமா சொல்லுவோம்...இந்த "கவனிச்சிருவோம், கட்சி கட்டிருவோம் " டகால்பாஜியெல்லாம் வேற எங்கனாது போய் காட்டுங்க....அது சரி நீங்களெல்லாம் ஒரு கொள்கைப் பிடிப்போடு , ஒரு இயக்கத்துல இருக்கீங்களாக்கும்..போய் சொல்லுங்க...நான் ரண்டு பேரை "ஜாதிப் புத்தி" ன்னு சொல்லி திட்டுனேன் அப்படீன்னு...மெச்சி பாராட்டுவாங்க.." இதுல நீங்க கேக்குறீங்க அடுத்தவனை பார்த்து...பெரியார் உங்களுக்கு ஊறுகாயா" அப்படீன்னு..அவரு உங்களுக்கு இன்னாங்கோ...
சரி... இதெல்லாம் ஏன் எழுதுர...அல்லது ஏன் மூக்க நுழைக்கிற அப்படீன்னு கேக்குரீங்களா..( ரெண்டு பேர் கேட்டாலும் கேப்பாங்க).கத்திரிக்காயை கடையில போட்டு நாலு பேருக்கு தெரியணுமுன்னு தெரட்டி ..தொரட்டியிலெல்லாம் போட்டுதான விக்குரீங்க...சொந்த விஷயமுன்னா ஊட்டுக்குள்ள வச்சுக்குங்க...இதை வலையிலேயே ஒங்க நண்பர்கள், தோழர்கள் னு சொல்றவங்களே நெறைய பேர் பதிவும் போட்டு பின்னூட்டத்திலையும் சொல்லிட்டாங்க.... ஆனா இதெல்லாம் கேட்டுருவீங்களா நீங்க...அடுத்தவன் சொல்ற நல்ல விஷயத்தை காது கொடுத்து கேட்டாதான் எப்பமோ முன்னேறியிருப்போமே ...தூத்தேரிக்கி...
கி.அ.அ.அனானி
*********************************************************************
***356***
4 மறுமொழிகள்:
Test comment !
nalla alasal .... athai vita nalla viLAsal ....
ha ha ha... good shot...
நன்றி அனானி நண்பர்களே
கி அ அ அனானி
Post a Comment